Welcome to Nagarathar Association (Singapore) website.
This is an organization for Nagarathars by Nagarathars. The Main aim of this association is increasing the interaction among Nagarathar s living in Singapore. Events are conducted to bring out the hidden talents of our Nagarathar s. Picnic and overseas tours are arranged to have wider interaction within the community. This website details various activities undertaken by the Association in pursuance of this objective. 
நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள்.
 
நிறைவேறிய நிகழ்ச்சிகள்
பொங்கல் காய்கறி விநியோகம்
தைபொங்கலுல்கு முதல் நாள் மாலை ௬ மணி முதல் சங்க உறுப்பினர்கள் மூலம் சுமார் 340 காய்கறிப்பைகள் நகரத்தார்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விதவிதமான காய்கறிகளைக் கட்டும் வண்ணப்படம். 14/01/2010 தைபொங்கல் அன்று நம் இரு கோயில்களிலும் காலை 6.15 மணிக்கு பொங்கல் வைத்து , 7.30 மணிக்குத் நடைபெற்றது
HyperLink
13 January 2010 More..
 
தைபூசம்
HyperLink
30/01/2010 சனிக்கிழமையன்று அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் தைபூசம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதல் நாள் புனர்ப்பூசத்தன்று அருள்மிகு தண்டாயுதபாணி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அருள்மிகு லையன் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து நகர் உலா வரும் காட்சி
 More.. 29 January 2010
 
Chess
ஆண்டுதோறும் நகரத்தார் சங்கமும் SNSC (Singapore Nagarathar Sports Council)ம் இணைந்து நடத்திவரும் விளையாட்டுப் போட்டிகளில் chess போட்டி லயன் சித்தி விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. 2010 மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதி காலை 9 மணியளவில் ஆரம்பித்த போட்டியில் நமது சங்க உறுப்பினர்கள் பலரும் விறுவிறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டு மாலை சுமார் 6 மணியளவில் நிறைவு பெற்றது.
HyperLink
6 March 2010 More..
 
உல்லாச சுற்றுலா (Japanese Garden)
HyperLink
சுமார் 450 உறுப்பினர்களுடன்,2010 மார்ச் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, Japanese Garden சுற்றுலா மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நடந்தேறியது. பல சிறப்பு அம்சங்களுடன், சுவையான நிகழ்ச்சிகள், அனைத்து வயதினருக்கும் விளையாட்டுக்கள், அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் ஏராளமான பரிசுகள் என்று வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு மறக்க முடியாத இனிய அனுபவமாகாக இருந்தது.
 More.. 14 March 2010
 
மாரான்- மலாக்கா சுற்றுலா
ஏப்ரல் 1 ஆம் தேதி மாரான்- மலாக்கா சுற்றுலாவுக்கு மொத்தம் 143 உறுப்பினர்களுடன் , நம் தெண்டாயுதபாணி கோவிலில் இரவு உணவை முடித்துக் கொண்டு இரவு 9 மணி அளவில் 4 பேருந்துகளில் புறப்பட்டோம் . காலை 6 மணி அளவில் மாரான் சென்றடைந்தோம்.அங்கு அனைவரும் களைப்பாற விடுதி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை சிற்றுண்டியை முடித்து கொண்டு அனைவரும் மரத்தாண்டவர் சன்னதியில் கூட்டு வழிபாடு செய்தோம். பிறகு மரத்தாண்டவர் சிறப்பு அபிஷேகம் , ஆராதனைகள் நடைபெற்றன. மரத்தாண்டவர் அருள் பெற்று அனைவரும் கோவிலில் மதியம் உணவை முடித்துக் கொண்டு பேருந்துகளில் மலாக்கா புறப்பட்டோம் இரவு மலாக்கா தங்கும் விடுதியை வந்து அடைந்தோம் .அனைவருக்கும் தங்கும் அறைகள் வசதியாகவும், திருப்திகரமாகவும் ஏற்பாடு செயப்பட்டு இருந்தது . சுவையான இரவு உணவை முடித்துக் கொண்டு ஓய்வு எடுத்தோம் . காலை சிற்றுண்டியை முடித்த பிறகு சன்னாசி ஆண்டவர் மற்றும் பொய்யா விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசித்தோம்.மலாக்கா கிட்டங்கியில் சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்துதிருந்தோம். அதன் பிறகு அவரவர் விருப்பம் போல மலாக்கா சுற்றிபார்த்து, வேண்டிய பொருட்களை வாங்கி கொண்டு 3 மணி அளவில் ஜோகூர் பாரு நோக்கி புறப்பட்டோம்.கண்ணாடி கோவில் ராஜகாளியம்மன் தரிசித்து விட்டு அங்கு இரவு உணவு முடித்து கொண்டு இரவு 11 மணி அளவில் சிங்கப்பூர் வந்துதடைந்தோம். வந்திருந்தவர் அனைவருக்கும் இந்த சுற்றுலா மிகவும் திருப்திகரமாகவும் , மகிழ்ச்சியாகவும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைத்தது குறிப்பிடத்தக்கது.
HyperLink
1 April 2010 More..
 
 
 
HyperLink
 HyperLink

LSV

Multi Purpose Hall

Available for Rent

Call 6221 4853

HyperLink
Grandeur
Chettinad House
Nagara Temples
Advertisement
HyperLink
This site is best viewed with a resolution of 1024x768 (or higher) and supports Microsoft Internet Explorer 6.0+ or Netscape 7.0+, Firefox 1.0