|
பிள்ளையார் நோன்பு
|
|
இந்த ஆண்டின் பிள்ளையார் நோன்பு 22.12.09 செவ்வாய்க்கிழமையன்று அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் சிறப்பாக நடந்தேறியுது. மாலை 6.00 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. அதில் பெரியவர்கள்,சிறியவர்கள் உட்பட சுமார் 900 இழைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான இரவு விருந்து பரிமாறப்பட்டது
|
|
|
22 December 2009
|
|
|
|
இலக்கிய விழா
|
|
|
| செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத நாள். "சிங்கப்பூர்" என்ற தலைப்பில் கவிச்சோலையும், தமிழ் தடுமாறும் துறைகளைப் பற்றிய ஆய்வில் கவியரங்கமும், தோல்வியடையும் இந்திய திருமணங்களுக்கு பெரிதும் காரணம் ஆண்களின் அதிகாரமே! - பெண்களின் பிடிவாதமே! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் சிறப்பாக நடைபெற்றது.
|
| |
|
| கவியரங்கம் வீடியோ காட்சிகள் |
பட்டிமன்றம் வீடியோ காட்சிகள் |
|
|
|
12 September 2009
|
|
|
பாலி உல்லாசப் பயணம்
|
|
செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை 50 பேர் கொண்ட குழு வெளிநாடு உல்லாசப் பயணமாக இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்று வந்தனர். அன்றாட வேலைகளை சற்றே மறந்து, நல்ல பொழுதுபோக்கு இடமான பாலி சென்று வந்தது அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. பதோங் நடனம், டம்பக் சிரிங் கோவில், கிந்தாமணி மலை பிரதேசம், உபுத் கலைச் சந்தை, தஞ்சோங் பெனோ கடற்கரை ஆகிய பல்வேறு அழகிய இடங்களை குழவினர் வெகுவாக ரசித்தனர். இந்திய பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் தரமான இந்திய உணவு வகைகளை குழுவினருக்கு சுடச் சுட வழங்கப்பட்டது.
|
|
|
5 September 2009
|
|
|
|
மகளிர் தினம்
|
|
|
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, சனி கிழமையன்று நமது சங்கம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் தினம் மிக சிறப்பாக நடைபெற்றது. மதியம் 2 மணியளவில் இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழச்சிகள் சமையல், கைவினைப் பொருள்கள், ஆடை அலங்கரிப்பு குறிப்புகள், பெற்றோர்களுக்கான் பாட குறிப்புகள், கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்று இரவு எட்டு மணிவரை நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து இரவு உணவும் பரிமாரப்பட்டது. வந்திருந்த்த அனைவருக்கும் இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக்வும் இருதிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
|
|
|
8 August 2009
|
|
|
Badminton Tournament
|
|
26 ஜூலை 2009 அன்று டோபாயோ சென்டரெல் சமுக மன்றத்தில் நமது சங்கமும் SNSC (Singapore Nagarathar Sports Council)ம் இணைந்து நடத்திவரும் மற்றொரு போட்டியான இறகு பந்துப் போட்டி (Badminton Tournament) மிகவும் விறுவிறுப்பாக நடந்தேறியது. ஆண்கள் பிரிவில் 16 குழுக்களும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 குழுக்களும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடந்தேறிய இப்போடிகள் நம்மவர்களின் விளையாட்டு திறமைக்கு சவாலாகவும், உடல் நலத்திற்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
26 July 2009
|
|
|
|
உல்லாச சுற்றுலா (Marina Barrage)
|
|
|
சுமார் 400 உறுப்பினர்களுடன், ஜூலை மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, Marina Barrage சுற்றுலா மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நடந்தேறியது. பல சிறப்பு அம்சங்களுடன், சுவையான நிகழ்ச்சிகள், அனைத்து வயதினருக்கும் விளையாட்டுக்கள், அதிர்ஷ்டக் குலுக்கல், தம்போலா மற்றும் ஏராளமான பரிசுகள் என்று வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது.
|
|
|
5 July 2009
|
|
|
அறிவுத்திறன் போட்டி
|
|
ஆண்டு தோறும் நடைபெறும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், உயர்நிலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 6 மணி வரை லயன் சித்தி விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
|
|
|
27 June 2009
|
|
|
|
மாரான் சுற்றுலா
|
|
|
ஜூன் மாதம் 5-ம் தேதி மாரா-குவாந்தான் சுற்றுலா சுமார் 60 பேர்களுடன் பயணம் துவங்கியது. மறுநாள் காலை அபிஷேகங்கள் சிறப்புற நடைபெற்றது. அனைவருக்கும் திவ்ய தரிசனம் கிடைத்தது. மதிய உணவை ஆலயத்தில் முடித்துக் கொண்ட பின் குவாந்தானுக்குப் பயணம் தொடர்ந்தது. மாலை குவாந்தான் கடற்கரை, இரவு shopping. மறுநாள், காலை குவாந்தான் மாரியம்மன் கோயில், குவாந்தான்-செகாமட் நடுவில் உள்ள ஒரு ‘நீர் வீழ்ச்சி-நீரோட்டம்' என்று விறுவிறுப்பாகவும் அனைவருக்கும் மறக்கமுடியாத பயணமாகவும் இருந்தது.
|
|
|
5 June 2009
|
|
|
Cricket
|
|
நகரத்தார் சங்கமும் SNSC (Singapore Nagarathar Sports Council)ம் இணைந்து நடத்திவரும் மற்றொரு போட்டியான கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி மிகச்சிறப்பாக நடந்தேறியது. Queenstown GIIC மைதானத்தில் விளையாட்டுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற போதும், மழையின் காரணமாகப் போட்டிகள் அன்று கைவிடப்பட்டு மறுநாள் 11ஆம் தேதி West Coast Park திடலில் அதே உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடந்தேறியது.
|
|
|
10 April 2009
|
|
|
|
கலை நிகழ்ச்சி
|
|
|
இந்த ஆண்டின் கலைநிகழ்ச்சி மார்ச் மாதம் 22ஆம்தேதி சனிக்கிழமையன்று நமது ஆலயத் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. சிறுகுழந்தைகளின் மாறுவேடப் போட்டிகளுடன் துங்கி, நடனம், பாடல்கள், நாடகம் என 35 நிகழ்ச்சிகளுக்கும் மேல் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து வந்தன. தொடர்ந்த நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றன.
|
|
|
22 March 2009
|
|
|
கேரம் போட்டி.
|
|
ஆண்டுதோறும் நகரத்தார் சங்கமும் SNSC (Singapore Nagarathar Sports Council)ம் இணைந்து நடத்திவரும் விளையாட்டுப் போட்டிகளில் முதல் போட்டியான கேரம் போட்டி கடந்த மார்ச் மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் லயன் சித்தி விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. காலை 9 மணியளவில் ஆரம்பித்த போட்டியில் நமது சங்க உறுப்பினர்கள் பலரும் விறுவிறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டு மாலை சுமார் 6 மணியளவில் நிறைவு பெற்றது.
|
|
|
7 March 2009
|
|
|